இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டங்களில்கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செப்டம்பர் மாதம் தொடங்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில்இந்தியா பங்கேற்கிறது. இத்தொடரில் இந்தியா தவிர ஆஸ்திரேலிய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியும்பங்கேற்கின்றன.

இதில் கலந்த கொள்ள இந்திய அணிக்கு பெங்களூரில் சமீபத்தில் பயிற்சி முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்துசென்னையில் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.முதல் பயிற்சி ஆட்டம் நாளையும், 2வது ஆட்டம் நாளை மறு நாளும் நடைபெறவுள்ளன. சேப்பாக்கம் சிதம்பரம்ஸ்டேடியத்தில் இந்த பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். முதல் வீரராக விக்கெட்கீப்பர் மகேந்திர சிங் தோணி இன்று சென்னை வந்தார். மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் நேராக தாஜ்கன்னிமாரா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் பந்து வீச்சாளர்கள் இர்பான்பதானும், முனாப் பட்டேலும் மும்பையிலிருந்து சென்னை வந்தி சேர்ந்தனர்.

மற்ற வீகர்கள் இன்று மாலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவுள்ளனர். பயிற்சி ஆட்டங்களில் இந்தியஅணியுடன், தமிழ்நாடு கிரிக்கெட் அணி மோதவுள்ளது. பயிற்சி ஆட்டங்களை பகல் நேர போட்டியாகநடத்துவதா அல்லது பகல் இரவு போட்டியாக நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

பயிற்சி ஆட்டங்களை முடித்துக் கொண்டு 10ம் தேதி இந்திய அணி கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+