மூன்றில் 2 இந்தியர்கள் படித்தவர்கள்!
டெல்லி:
3 இந்தியர்களில் 2 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்குவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
நாளை சர்வதேச கல்வியறிவு தினமாகும். இதையொட்டி மனித வளத்துறைவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,நாடு சுதந்திரம் பெற்றபோது இது 5 பேரில் ஒருவர்தான் கல்வியறிவு பெற்றவராகஇருந்தனர்.
கடந்த 1951ம் ஆண்டு இந்தியாவில் 18.33 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவுபெற்றிருந்தனர். 2001ம் ஆண்டு இது 64.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகைஉயர்ந்துள்ளது.
இப்போது ஆண்களில் 75.26 சதவீதமும், பெண்களில் 53.67 சதவீதமும் கல்வியறிவுபெற்றவர்களாக உள்ளனர்.
மிஸோரம் மாநிலத்தில் ஆண், பெண் கல்வி அறிவு பெற்றோரிடையே உள்ளவித்தியாசம் 3.97சதவீதமாக உள்ளது. மேகலாயாவில் இது 5.82 சதவீதமாகவும்,கேரளாவில் 6.52 சதவீதமாகவும் உள்ளது.
கேரள மாநிலம் தான் கல்வி அறிவில் இந்தியாவிலேயே முதன்மையானதாகதிகழ்கிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கல்வி அறிவு விகிதாச்சாரம் தற்போது 60சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஆனால் விதிவிலககாக பீகார் மாநிலத்தில் மட்டும்59.68 சதவீதமாக உள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு தேசிய எழுத்தறிவுத் திட்டம் முழுவீச்சில் தொடங்கப்பட்டது.15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கல்வி அறிவு பெறாதவர்களுக்கு கற்றவர்கள்கற்றுக் கொடுப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்த புள்ளி விவரம்வெளிப்படுத்துகிறது.
2007ம் ஆண்டுவாக்கில் கல்வி அறிவு விகிதத்தை 75 சதவீதமாக உயர்த்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications