வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாமல் இருப்போர் அரசுஉதவித் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

5 ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தால் அவர்களில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ. 150ம், பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 200ம், இள நிலை, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 300ம் வழங்கப்படும் எனதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

இதையடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதற்கான விண்ணப்பகள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகாஅலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.

பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை போன்ற தொழிற் கல்வி பயின்றவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. பிற்பட்டவர்களுக்கு 40 வயது வரையிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 45வயது வரையிலும் உதவித் தொகை கிடைக்கும்.

உதவித் தொகை வேண்டுவோர் அரசு, தனியார் நிறுவனத்தில் ஊதியம் பெறும் பணியில் இருக்கக் கூடாது.முற்றிலும் வேலையற்றவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோரின் தந்தை, தாய், கணவர் அல்லதுமனைவியின்மாத வருமானம் ரூ. 2,000க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+