வீட்டுச் சுவர் இடிந்து 3 சிறுவர், சிறுமியர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர், சிறுமியர் பரிதாபமாகஇறந்தனர்.

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள முருங்கப்பேட்டையைச் சேர்ந்தவர் மூக்கையன்.விவசாயியான இவரது மனைவி மருதம்மாள். இவர்களுக்கு அடைக்காயி, போதும்பொண்ணு, மேகம்மாள், தனலட்சுமி ஆகிய மகள்களும் பெரியண்ணன், நீலமேகம்ஆகிய மகன்களும் உள்ளனர்.

அடைக்காயி 10 வது வகுப்பும், நீலமேகம் 4வது வகுப்பும், தனலட்சுமி 2வதுவகுப்பும் படித்து வந்தனர். ஓட்டு வீட்டில் வசித்து வந்தார் மூக்கையன் . சமீபத்தில்பெய்த மழையில் அவரது வீட்டு சுவரில் விரிசல் விழுந்தது. இருந்தாலும் சுவரை சரிசெய்ய காசு இல்லாததால் அதை பழுது பார்க்காமலேயே இருந்து வந்தார் மூக்கையன்.

இந்த நிலையில், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். மூக்கையன், மருதம்மாள், மேகம்மாள், போதும் பொண்ணு,பெரியண்ணன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே காற்றாட படுத்திருந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு திடீரென வீட்டுச் சுவர் உள்பக்கமாக விழுந்தது. சுவர் விழுந்தசப்தம் கேட்டு மூக்கையன் குடும்பத்தினர்அலறி அடித்து எழுந்தனர்.வீட்டுச் சுவர் உள்பக்கமாக விழுந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அடைக்காயி,தனலட்சுமி, நீலமேகம் ஆகியோர் உடல் நசுங்கினர். உடனடியாக போலீஸாருக்கும்,தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டது.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளைஅகற்றிப் பார்த்தனர்.அப்போது நீலமேகம், தனலட்சுமியும் இறந்து விட்டது தெரிய வந்தது. அடைக்காயிமட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை திருச்சி அரசுமருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்பரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+