சர்ச்சைகளை தாண்டி ஒலித்தது வந்தே மாதரம்!
டெல்லி:
இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் இன்றுஇசைக்கப்பட்டது.
வங்கத்தின் புரட்சிக்கவி பக்கிம் சந்திரசாட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல்இசைக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று நாடு முழுவதும் உள்ளபள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்திருந்தது.இப்பாடலை பாடுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தப் பாடல்துர்கா தேவியை வழிபடுவதாக உள்ளதால் இப்பாடலை கட்டாயம் பாட வேண்டும்என வற்புறுத்தக் கூடாது என முஸ்லீம்களில் ஒரு பிரிவினரும், சீக்கியர்களும் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இதைப் பாடுவது கட்டாயமில்லை என மத்திய மனித வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
தமிழக அரசும் வந்தே மாதரத்தை பள்ளிகளில் இசைக்க உத்தரவிட்டதோடு, இதைப்பாட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவில் கூறியது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தனது கட்சி ஆளும் மாநிலங்களில்பள்ளிகளில் கட்டாயம் இந்தப் பாடல் பாடப்பட வேண்டும் என பாஜகஉத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆளுநர் மாநிலங்களிலும் கட்டாயம் பாடவேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று நாடு முழுவதும் பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
டெல்லியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிழ்ச்சியில் முன்னாள்பிரதமர்வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடினர். சென்னைபாஜக தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வந்தே மாதரம்இசைக்கப்பட்டது.
தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் இப்பாடல் இசைக்கப்பட்டது. பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பாடல்களைப் பாடினர். பல பள்ளிகளில் பாரதமாதா வேடம் அணிந்த மாணவிகள் கொடி பிடித்தபடி நிற்க மாணவ, மாணவியர்வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.
திமுக மீது பாஜக தாக்கு:
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வந்தே மாதரம் பாடப்பட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குமாரவேலு,
இது பாஜகவின் பாடல் அல்ல. இது ஒரு குறிப்பிட்ட மதம், இனம், மொழியை பாடப்பட்டது அல்ல. இந்தியாவின் முதன் தேசிய கீதமாக வந்தேமாதரம் தான் இருந்தது. ஜன கன மண பாடப்பட்ட பிறகு இசையமைக்க எளிதாக இருந்ததால் அது தேசிய கீதமானது. வந்தே மாதரம் பாடவிரும்பாதவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள்.
இந்த பாடலை பாடும் பிரச்சனையில் காலையில் ஒரு அறிவிப்பையும் மாலையில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.திமுகவுக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது. மத்தியில் காங்கிரஸ் சொல்வதை அப்படியே கேட்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications