விளம்பரப் பலகைகளுக்கு கரண்ட் கட்!
சென்னை:
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லாவரம் வரையில் உள்ளசாலையோர விளம்பரப் பலகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பைதுண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை விமான நிலைய இயககுநர் சிகாமணி இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை விமான நிலையத்தின்கிழக்கில் பரங்கிமலையும், தெற்கில் திரிசூலம் மலையும் உள்ளன. நீண்ட ஓடுபாதைவிமான நிலையத்தில் உள்ளது.இந்த ஓடு பாதைக்கு இணையாக கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லவாரம்வரை தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. ஓடுதளத்திலிருந்து 500 மீட்டர்தொலைவில் தேசிய நெடுஞ்சாலை இருக்க வேண்டும். ஆனால் இந்த தேசியநெடுஞ்சாலை விமான ஓடுபாதைக்கு மிக அருகிலேயே உள்ளது.
விமான நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கட்டடங்கள், உயரமான தடுப்புகள்இருக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. ஆனால் அந்த உத்தரவை மீறிகத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லாவரம் வரை ஏராளமான பெரிய பெரிய விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த விளம்பரப் பலகைகளில் பிரகாசமான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவுநேரங்களில் இந்த விளக்குகள் எரிவதால், விமானத்தை இறக்கும் போதுஓடுபாதையை கண்டறிவதில் விமானிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளன.
எனவே இந்த விளம்பரப் பலகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மிகவும்உயரமான, அகலமான விளம்பர பலைகைளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,நீதிபதி சந்துரு ஆகியோர்அடங்கிய பெஞ்ச், கிண்டி கத்திப் பாராசந்திப்பிலிருந்து பல்லவாரம் வரையில் உள்ளவிளம்பரப் பலகைளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை தமிழக மின் வாரியம்உடனடிாயக துண்டிக்க வேண்டும். ஜெனரேட்டல் மூலமும் கூட இந்த பலகைகளுக்குமின்சாரம் வழங்கக்கூடாது.
இந்த உத்தவுரவு பின்பற்றப்பட்டதா என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறைஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 14ம் தேதிக்குஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications