7 இடங்களில் குண்டு: 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் 6 இடங்களிலும், கேரளாவிலும் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த17 பேருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு கோவை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி அல் உம்மா குற்றம் சாட்டியது. மேலும், இந்த சித்திரவதைக்குப்பதிலடிதர குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டனர்.

1999ம் ஆண்டுமே மாதம் 30ம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், அண்ணா நகர்விருந்தினர் இல்லம், சேப்பாக்கம் விருந்தினர் இல்லம், விக்டோரியா விடுதி, திருச்சி கண்டோன்மென்ட், கோவைபோலீஸ் குடியிருப்பு மற்றும் கேரளா செல்லும் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் குண்டுகள்வைக்கப்பட்ன.

விக்டோரியா விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு மட்டுமே வெடித்தது. மற்ற குண்டுகள்வெடிப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில்17 பேர் பிடிபட்டனர். 2 பேர் சிக்கவில்லை. 17பேர் மீதும் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளுக்கானநீதிமன்றத்தில் விசாரனை நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தடா மூசா, சுல்தான் என்ற சித்திக் அலி, ஜாகிர்உசேன் ஆகிய 3பேருக்கும் தலா 8 ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிகக்ப்பட்டது.

பாவாடடை ஹக்கீம், பர்க்கத்துல்லா, ஷேக் மொய்தீன், தர்மீஸ் மொய்தீன், கலீல் ரஹ்மான், ஜலீல், அப்துல் நசீர்,ஜாகிர் உசேன், முகம்மது ஹமீது, உமர் பாருக், ரஹமதுல்லா கான், ஹமானி, ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகடுங்காவல் தண்டனையும், வெடிகுண்டுகளை விநியோகித்த அருணகிரி, ராஜாமணி ஆகியோருக்கு தலா 4ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+