பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டும்: கனிமொழி
மதுரை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைப் போல பெண்களும் அர்ச்சகர்கள் ஆக நியமிக்கப்படவேண்டும் என்று கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். அவர்பேசுகையில், பெண் சுதந்திரம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. அது தவறு. சமூக மாற்றத்தால் தான் பெண்சுதந்திரம் சாத்தியமாகும். அதே நேரத்தில் ஆண்களும், பெண்களின் சுதந்திரம், உரிமை முதலானவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.கோவில்களில் பெண்களை அனுமதிப்பது குறித்த சர்ச்சயை நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுஎல்லா சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போல பெண்களையும் அர்ச்சகர்கள்ஆக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து.
தமிழ் சமுதாயத்தில் வரதட்சணை, ஜாதி ஆகிய பிரச்சினைகள் பெரிதாக உள்ளன. இவற்றை நாம் களையவேண்டும். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். தமிழர்கள் மொழி குறித்து பேசினால் உடனே அதை வெறிஎன்று கூறி விடுகிறார்கள். ஆனால் தமிழை நாம் மறந்தால் நமக்கு அடையாளம் இல்லாமல் போய் விடும்.
எந்த மொழியையும் கற்கலாம், தவறில்லை. ஆனால் குறிப்பிட்ட மொழி தெரிந்தால் தான் வாழ முடியும் என்றகட்டாயம் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்களுக்க்கு இந்தி தெரியாது. அவர்கள் சிறப்பாகசெயல்படவில்லையா?
பெண் விடுதலை, பெண் உரிமைக்காகபாடுபட்டவர் பெரியார். ஆண், பெண் சம உரிமை வேண்டும் எனமுழங்கியவர் பெரியார். ஆண்களுக்குப் போராடும் குணம் இருப்பது போல பெண்களுக்கு இருப்பதில்லை.அத்தனை கட்சிகளும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தாலும் சட்டம் இன்னும் வந்தபாடில்லை.
தேர்தல் நேரத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் பெண்களுக்கு சீட் வழங்க வேண்டும்.இல்லாவிட்டால் பேசாமல் பெண்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications