மகாராஷ்டிரா-மசூதி அருகே குண்டு வெடிப்பு-30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மலேகாவ்ன் (மகாராஷ்டிரா):
மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும்மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும்பெரும் பதற்றம் நிலவுகிறது.படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது.இன்று ஷபாப்-ஏ-ராத் என்ற சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது.
இச் சம்பவத்தையடுத்து நாசிக்கில் இருந்து பாரா மிலிட்டரிப் படைகள் மலேகாவ்ன் நகரில் குவிக்கப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதுமே தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறைஉத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications