தலித் மக்களுக்கு விஜய்காந்த் துரோகம்
நெய்வேலி:
தேமுதிகவின் தலைவர் விஜய்காந்த் தலித் மக்களுக்கு தொடாந்து துரோகம் செய்துவருவதாக தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட துரை.மகாதேவன் குற்றம் சட்டியுள்ளார்.
தேமுதிகவின் கடலூர் மாவட்ட செயலராக இருந்த துரை.மகாதேவன் கடந்த சட்டமன்றதேர்தலில் மங்களூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு சுமார் 15,000வாக்குகள் பெற்றார். இந் நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்துதுரை.மகாதேவன் நீக்கப்பட்டு, பாஜகவில் இருந்து வந்த பல்லவா சிவக்குமார்நியமிக்கப்பட்டார்.இதுகுறித்து மகாதேவன் கூறியதாவது,
விஜய்காந்த் ரசிகர் மன்றத்தில் இருந்தது முதல் தற்போது வரை குடும்பத்தை மறந்துபாடுபட்டேன். அதற்கு கிடைத்த பரிசுதான் இது. தேமுதிகவில் தலித்கள் தொடர்ந்துபுறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் விழும்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தமாவட்ட தலைவர் ராஜா. சந்திரசேகரன், திருச்சி மாவட்ட தலைவர் தங்கமணிஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தலித்கள் தான். மூன்றாவதாக என்னையும் தலைவர் பதவியில்இருந்து நீக்கியதன் மூலம் தேமுதிகவில் தலித் விரோதப் போக்கு இருப்பதுதெரியகிறது. விருத்தாசலத்தில் வெற்றி பெற விஜய்காந்துக்கு உறுதுணையாகஇருந்தது தலித்களின் ஓட்டுகள் தான் என்பதை அவர் மறுந்து விட்டார் என்று அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications