100 ஆண்டை கடந்த மகாத்மாவின் சத்யா கிரகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களை கிரிமினல்களாக நடத்தும் வகையில் சட்டம்கொண்டு வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து 100 ஆண்டுகளுக்கு முன் இந்த தினத்தில் தான் மகாத்மா காந்திதலைமையில் சத்யா கிரகப் போராட்டம் நடந்தது.1906ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ஜோகானஸ்பெர்க்கில் எம்பயர் தியேட்டர் அருகே 3,000 இந்தியர்கள்,சீனர்களைத் திரட்டி காந்தியடிகள் நடத்திய அந்த முதல் போராட்டம் தான் பின்னர் அவர் நடத்திய தேசவிடுதலைப் போராட்டத்துக்கு விதையாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள், கருப்பர்களோடு ஆசியர்களையும் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரும் முகமாக ஆசியாடிக் லா என்ற சட்டத்தை கொண்டு வந்தனர். இதன்படி இந்தியர்கள், சீனர்கள்ஆகியோர் கிரிமினல்களாக கருதப்படுவர்.
![]() |
இதை எதிர்த்து தான் ஜோகானஸ்பெர்கில் சத்யாகிரகப் போராட்டத்தில் குதித்தார் மகாத்மா காந்தி.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்து இன்றொடு 100 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.
இந்த தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த ஆண்டு முழுவதும், நாடு முழுவதும் சத்யா கிரக நினைவுஇயக்கத்தை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.













Click it and Unblock the Notifications