ஒசூரில் 100 கிலோ வெடிபொருள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100கிலோ வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கணவன்,மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கெலமங்கலம் நேதாஜி நகரில் ஒரு வீட்டை போலீஸார்சோதனையிட்டனர். அந்த வீட்டில் 1,200 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 162சாதாரண டெட்டனேட்டர்கள், 158 ஜெலட்டின் குச்சிகள், 100 கிலோ அம்மோனியம்நைட்ரேட், வெடிகுண்டை வெடிக்கச செய்யும் 180 மீட்டர் வயர்கள் உள்ளிட்டவைபிடிபட்டன.இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக அவ்வீட்டில் வசித்து வந்த, கோவிந்தன், அவரதுஇரண்டாவது மனைவி ராணி ஆகியோரை போலஸீார் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து ஆந்திர நக்சலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள்அனுப்பப்பட்ட சர்ச்சை எழுந்துள்ள நிலையில, ஓசூரில் அதிக அளவிலானவெடிபொருட்கள் கிடைத்திருப்பதால் கைது செய்யப்படட இருவரிடமும் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி.தேன்மொழி தெரிவித்துள்ளார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிமருந்து கிடங்குகளையும்சோதனையிடவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications