மலையிலிருந்து தள்ளிவிட்டு வாலிபர் கொலை?
சென்னை:
சென்னையில் காணாமல் போன புது மாப்பிள்ளை திரிசூலம் மலை அடிவாரத்தில் உடல் சிதைந்த நிலையில்இறந்து கிடந்தார்.
அவரை யாராவது மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அல்லது இது தற்கொலையா என்றுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (28). பிபிஏ பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.
உமா சங்கருக்கும், நெல்லையைச் சேர்ந்த சுமலதா (23) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் வேறொரு நிறுவன இன்டர்வியூக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உமாசங்கர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் உமா சங்கர் கிடைக்கவில்லை. இதனால்போலீசில் புகார் கொடுத்தனர்.
அப்போது திரிசூலம் மலை அடிவாரத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. நீங்கள்பல்லாவரம் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்துப் பாருங்கள் என்று கூறி அவர்களை போலீசார் அங்குஅனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உமாசங்கரின் பெற்றோர் பல்லாவரம் காவல் நிலையத்துக்கு சென்றனர். குரோம்பேட்டை அரசுமருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை அவர்களிடம் போலீசார் காட்டினர். இறந்துபோன் நபர் அணிந்திருந்ததாக கூறி ஒரு மைனர் செயின் மற்றும் மோதிரத்தையும் காட்டினர்.
அதைப் பார்த்ததும் இறந்து போனது உமா சங்கர்தான் என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்தனர். திரிசூலம்மலை கிழக்கு சரிவில் கல் வெட்டி எடுக்கப்பட்டதில் சுமார் 150 அடி பள்ளம் உள்ளது. தண்ணீர் இன்றி புதர் மண்டிகிடக்கும் இந்தப் பகுதியில் இருந்துதான் உடல் சிதைந்த நிலையில் உமா சங்கரின் உடலை போலீசார்கண்டெடுத்துள்ளனர்.
உமா சங்கரை யாராவது மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அல்லது அவர் தற்கொலைசெய்து கொண்டாரா என்று தெரியவில்லை.
இதுகுறித்து உமாசங்கரின் தந்தை சுடலை கூறுகையில், தற்கொலை செய்யும் அளவுக்கு உமா சங்கருக்கு எந்தபிரச்சனையும் இல்லை. அவன் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications