2 ஏக்கர் நிலம்-ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2 ஏக்கர் இலவச நிலம் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்ப்பட்டுள்ளனார்.திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக 2 ஏக்கர்நிலம் வழங்கும் திட்டம், வருகிற 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் தினத்திலிருந்து தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் வேளாண் துறை இணைந்து செய்து வருகின்றன. மாவட்டகலெக்டர்கள் தலைமையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலவச நிலம் வழங்கும் திட்டத்தைசெயல்படுத்தவும், நேரடியாக கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ அரசுநியமித்துள்ளது.
இந்த பொறுப்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும்இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மாவட்டங்களை கண்காணிக்கும் வகையில் பொறுப்புகள்ஒப்படைக்கப்படுள்ளன. இவர்கள் இந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வர்.












Click it and Unblock the Notifications