For Daily Alerts
Just In
சாலை விபத்து-அமைச்சர் நேரு குடும்பம் தப்பியது
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் போக்குவரத்து அமைச்சர்கே.என்.நேருவின் குடும்பம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
அமைச்சர் நேருவின் மனைவி சாந்தா,மகள் ஹேமா, மைத்துனர் தமிழரசன் ஆகியோர்திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.கார் விழுப்புரம் அருகே வந்தபோது சாலையின குறுக்கே 18 வயது பெண் ஒருவர்சைக்கிள் மூலம் கடக்க முயற்சித்தார். இதை எதிர்பார்க்காத டிரைவர் சீனிவாசன்,அந்தப் பெண் மீது மோதி விடாமல் தவிக்க்க காரை சாலையின் இடதுபுறமதிருப்பினார்.
அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பம் மீது கார் பயங்கரமாக மோதியது.இதில் தமிழரசனின் தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது.
அமைச்சரின் மனைவி, மகள் ஆகியோர் காயமின்றி தப்பிவிட்டனர். விபத்தைத்தொடர்ந்து வேறு கார் மூலம் அமைச்சரின் குடும்பம் சென்னைக்கு பயணத்தைத்தொடர்ந்தது.
Comments
Story first published: Tuesday, September 12, 2006, 5:30 [IST]