ஹோடா: ஜெ.வுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கண்டனம்
சென்னை:
முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா மீதான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்விமர்சனம் வேதனை அளிப்பதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் சி.கே.கரியாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள்முதல்வரான ஜெயலலிதா, ஐ.ஏ.எஸ் அதிகாரியை கடுமையாான வார்த்தைகளால் விமர்சித்திருப்பது மிகவம்வேதனை அளிக்கிறது.ஒரு நேர்மையான அதிகாரியை, தேச துரோகி என முன்னாள் முதல்வர் கூறியிருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைவேதனைப்படுத்தியுள்ளது. அதுவும் மதானியை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு முனீர் ஹோடா உறுதுணையாகஇருந்ததாக கூறியிருப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைகளாகும்.
தமிழக ஐஏஎஸ்.அதிகாரிகள்அனைவரும் மிகவும் திறமையானவர்கள். கடமை உணர்வு மிக்கவர்கள்.இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மை மாநிலமாக 6வது இடத்தில் இருந்த தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக்கொண்டு செல்வதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பங்கு மகத்தானது.
இத்தகைய கடமை உணர்வு மிக்க அதிகாரிகளின் செயல்பாடு காரணமாகத்தான் தமிழகம் தற்போதுமுன்னேறியுள்ளது. இனி வரும் காலங்களிலாவது அரசியல் தலைவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது இதுபோன்றசெயல்பாட்டை குலைக்கும் வகையிலான குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும் என்று கரியாலி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications