வளைகுடா- மனசு வைக்குமா ஏர்-இந்தியா?
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
ஏர் இந்தியா மனது வைத்தால், வளைகுடா நாடுகளுக்கு விமான கட்டணம் குறையும்என மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவிகூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏர் இந்தியா நிறுவனம்விமான கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள முன் வந்தால், மற்ற தனியார் விமானநிறுவனங்களும் கட்டணத்தைக் குறைப்பார்கள். கட்டணத்தை குறைக்க வேண்டியகட்டாயத்துக்கு அவர்களும் ஆளாவார்கள்.விடுமுறை காலங்களில் மட்டும் விமானக் கட்டணத்தைக் குறைப்பதைநியாயப்படுத்த முடியாது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரளாவைச்சேர்ந்தவர்கள், விடுமுறைக்காக மட்டும் வருவதில்லை. மாறாக, தங்களதுகுடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கவே அவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது உள்ள பயணக் கட்டணம், வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோருக்குகட்டுப்படியானதாக இல்லை. அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லர்,வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தான் என்றார் ரவி.












Click it and Unblock the Notifications