உள்ளாட்சி தேர்தல்: இடங்களை தேடும் காங்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களைஅடையாளம் கண்டறிய பார்வையாளர் குழுக்களை அமைத்துள்ளார் மாநில காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி.
அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண பார்வையாளர்களை நியமித்துள்ளார்கிருஷ்ணசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு மாவட்டத்துக்கு 2 பார்வையாளர்கள் வீதம் 30 மாவட்டத்துக்கும்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 6 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னையில் கராத்தே தியாகராஜன், சரத் சந்திரன், மத்திய சென்னையில் ஜோதி,ஹயாத்கான், தென் சென்னையில் விஜயன், தாஸ் ஆகியோர் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின்நிலைப்பாடுகள், ஏற்பாடுகள் குறித்த ஆய்வையும் பார்வையாளர்கள் மேற்கொள்வர்.
ஆய்வுக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், இந்நாள்,முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முன்னணித் தலைவர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸின் அனைத்துப் பிரிவு அமைப்புநிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த 3 தினங்களுக்குள் ஆயவுக் கூட்ட முடிவுகளை அறிக்கையாக காங்கிரஸ்தலைமையிடம் பார்வையாளர்கள் சமர்ப்பிப்பார்கள் என்று கூறியுள்ளார்கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications