முன் ஜாமீன் கோரும் காளிமுத்து-மருத்துவமனையில்
சென்னை - மதுரை:
தன் மீது போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து முன் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மாஜி சபாநாயகர்காளிமுத்து.
சென்னை அரசினர் தோட்டம் சட்டசபை உறுப்பினர் விடுதி வளாகத்தில் உள்ள 2ஹோட்டல்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ததில் அரசுக்கு பல லட்சம் அளவுக்குஇழப்பீடு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக காளிமுத்து, காண்டிராக்டர்கள்கே.வி.ஆர்.மணி, ஹனீபா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காளிமுத்து இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
முன்னதாக காளிமுத்துவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
மதுரை வந்த காளிமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அண்ணா நகரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்திருப்பது தெரிய வந்தது.இதனால் தான் உடல் நடுக்கம், தலைசுற்றல் ஆகியவை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளத காளிமுத்து தன் மீதான வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
எத்தனை வழக்குகளை இந்த அரசு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார். அரசியல் பழிவாங்கும் நோக்கில்இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இதை கண்டு நான் பயப்படப் போவதில்லை. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை புரட்சித் தலைவியின்விசுவாசியாக தொடர்ந்து செயல்படுவேன். என்னை ஆசை தீர பழி வாங்க வேண்டும் என முதல்வர் கருணாநதிதுடிக்கிறார். அதை நான் தடுக்கப் போவதில்லை.
எனக்கும், புரட்சித்தலைவிக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தவும் அவர் முயலுகிறார். ஆனால் அதுநடக்காது. அவரது எத்தகைய நடவடிக்கையையும் சந்திக்க நான் தயார் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications