அதிமுகவிலிருந்து மேலும் பாராட்டு வரும்: கருணாநிதி சூசகம்!
சென்னை:
திமுக நல்லாட்சி நடத்துகிறது என்று சொன்னதற்காக ஒரு அதிமுக எம்.எல்.ஏவை நீக்கியுள்ளனர். ஆனால்அவரைப் போல மேலும் பலரும் நல்லாட்சி என சொல்லவுள்ளனர், அவர்களும் திமுகவுக்கு வருவார்கள் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது கருணாநிதி பேசுகையில்,அதிமுகவிலிருந்து மேலும் பல முக்கிய தலைகள் திமுகவுக்கு ஆதரவு தரும் என்று சூசகமாக தெரிவித்தார்.கருணாநிதி பேசுகையில், திமுக நல்ல ஆட்சி என்று சொன்னதற்காக அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரைநீக்கியுள்ளனர். பலரும் இதுபோல சொல்லவுள்ளனர். அவர்களும் திமுகவுக்கு வரும் காலம் வெகு தொலைவில்இல்லை.
சிலர் தலைவர்கள் ஆவதற்காக கட்சி நடத்துகிறார்கள். யாரையும் தலைவர் ஆக்குவதற்காக திமுகதொடங்கப்படவில்லை. நாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தை பதவி மூலம் எப்படி நிறைவேற்றலாம் என்று தான்சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கவர்ச்சியால் கடந்த காலத்தில் தமிழகம் பாழ்பட்டுப் போய்க் கிடந்தது. இனி மேலும் ஏழை, எளிய மக்களைகவர்ச்சியால் மயக்குவது என்பது ஆபத்தானது.
தமிழக அரசியலில் சந்தர்ப்பவாதிகள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நாம்அனைவரும் தமிழ் ஜாதியினர். ஒரே இனம். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் வழியில்அனைவரையும் நாங்கள் சமமாக பாவிக்கிறோம்.
இடைப்பட்ட காலத்தில் காலத்தாலும், கவர்ச்சியாலும் நாம் பிரிந்திருந்தோம். கனவு, பண்பு, தமிழ் உணர்வு, நட்பு,இனம், மொழிக்காக என்றென்றும் நாம் கடமைப்பட்டவர்கள். அதை வளர்க்க பாடுபடுவோம் என்றார்கருணாநிதி.
கருணாநிதியின் பேச்சு, அதிமுகவினருக்கு விடப்பட்ட அழைப்பாகவே இருந்தது. மேலும், நல்லாட்சி என்றுதிமுக ஆட்சியை பாராட்ட மேலும் பலர் காத்துள்ளனர் என்று அவர் கூறியிருப்பது, அதிமுகவிலிருந்து மேலும்பலர் திமுகவுக்கு தாவப் போகிறார்கள் எனபதை சூசகமாக தெரிவித்துள்ளாதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications