தமிழர்கள் மாயம்: இலங்கை விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பு நகரில் தமிழர்கள் கடத்தப்பட்டு வருவது, திடீரென மாயமாவது, கொல்லப்படுவது ஆகியவை குறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர்ராஜபக்சே.
இந்தத் கடத்தலில் அரசுக்கும் ராணுவத்துக்கும் முழுமையான தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளநிலையில் இந்த ஒரு நபர் கமிஷனை அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகானாமா திலகரத்னே இந்த விசாரணையை நடத்துவார்.கொழும்பில் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் நடக்கும் கடத்தல்கள், கொலைகள் குறித்து இவர்விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் கொழும்பில்கடத்தப்பட்டுள்ளனர். சிலர் ஏகப்பட்ட பணத்தைத் தந்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications