மதுரை இடைதேர்தல்-வேட்புமனு தாக்கல் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 11ம் தேதி வாக்குப் பதிவுநடக்கவுள்ளது.வரும் 23ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களைதேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் முன்னிலையில் அவரது அலுவலகத்தில்தாக்கல் செய்ய வேண்டும்.
25ம் தேதி இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 27ம் தேதிமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
அக்டோபர் 11ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும்அன்றே தேர்தல் முடிவும் வெளியாகும்.
தேர்தலை அமைதியாக நடத்த மாவட்ட கலெக்டர் உதய சந்திரன் தலைமையில்அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாகச் செல்லக் கூடாது என இக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications