For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரசவித்த நிலையில் கொலையாகி கிடந்த பெண்

By Staff
Google Oneindia Tamil News

மேலூர்:

மூடிய வீட்டிற்குள் குழந்தையை பாதி பிரசவித்த நிலையில் இறந்து கிடந்த கர்ப்பிணிபெண்ணை, அவரது இரண்டாவது கணவரே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மதுரை அருகே மேலூர் மில் ரோட்டில் வசித்து வந்தவர் சரசு (35). இவருக்கு 8ம்வகு"பபு படிக்கும் மகள் உள்ளார். கணவன் இறந்து போனதை தொடர்ந்து கார்டிரைவரான பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சுமோ கார் வாங்க வேண்டும் என்று கூறி சரசுவிடம் ரூ. 1 லட்சம் வாங்கியுள்ளார்பாரதி. அந்தப் பணத்தை சரசு திருப்பிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுபிரிந்தனர்.

8 மாத கர்ப்பிணியாக இருந்த சரசு தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும், அவரிடமிருந்து தனது பணத்தையும் பெற்று தர வேண்டும் என்று கோரிமகளிர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் மனு கொடுத்தார்.

இந் நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிற்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்சரசு. அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன.

மேலும் குழந்தையை பாதி பிரசவித்த நிலையில் சரசு இறந்து கிடந்தது அந்தப்பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து பாரதியை போலீசார் விசாரித்தபோது கொலையை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சரசுவை பாரதி கட்டிப் போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்தபோது ஏற்பட்டஅதிர்ச்சியில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடியுள்ளார் பாரதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X