நேற்று முதல், புதுச்சேரி ஆனது பாண்டிச்சேரி
புதுச்சேரி:
பாண்டிச்சேரியின் பெயரை புதுச்சேரி என்று மாற்ற ஜனாதிபதி கலாம் ஒப்புதல் அளித்துவிட்டார். இத் தகவலைஅம் மாநில பாமக எம்பியான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாண்டிச்சேரியின் பெயரை அதன் பழைய பெயரான புதுச்சேரி என்று மாற்றக் கோரி 1980ம் ஆண்டும், 1996ம்ஆண்டிலும் சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெயர் மாற்றும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதா ஒருமனதாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு கடந்த 13ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்டார்.
இது தொடர்பாக அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. இதனால் நேற்று முதல் (செப்டம்பர்15) பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என்று மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications