நக்ஸல்களுடன் காட்டுக்குள் தப்பிய ரகு-சுதாராணி
சென்னை:
சென்னையில் ராக்கெட் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து நக்ஸலைட்டுகளுக்கு அனுப்பி வந்த ரகுவும்அவனது மனைவி சுதாராணியும் ஆந்திராவுக்கு தப்பியோடி நக்ஸல்கள் பாதுகாப்பில் காட்டுப் பகுதிக்குள்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
![]() |
ஆந்திர மாநிலத்துக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணைநடத்தியதில் சென்னை பாடியில் உள்ள எவரெஸ்ட என்ஜினீயரிங் கம்பெணி, கொரட்டூரில் உள்ள ஜெய்டெக்கம்பெனி, தனலட்சுமி பவுண்டரி கம்பெனி, யூனிவர்சல் கம்பெணி, பாரத் பைன் என்ஜினீயரிங் ஆகியநிறுவனங்கள் சிக்கின.
![]() |
இந்த நிறுவனங்களில் ராக்கெட் லாஞ்சருக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவாஜி, குமார், ரமேஷ், அருணாச்சலம், முத்துசாமி, அண்ணாமலை, வீரபத்தரராவ் ஆகிய 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்க இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் தந்து, அதை அவர்களிடம் இருந்து பெற்றுஆந்திராவுக்கு கடத்திய ரகு மற்றும் அவரது மனைவி சுதாராணியும் தலைமறைவாகிவிட்டனர்.
2003ம் ஆண்டு முதல் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் வசித்துவந்த ரகுவின் வீட்டை போலீசார் உடைத்து சோதனையிட்டபோது 3 லாஞ்சர்கள்சிக்கின.
சீனிவாச ரெட்டி என்ற பெயரில் சென்னையிலிருந்து ராக்கெட் குண்டுகள் மற்றும்லாஞ்சர்களை ஆந்திர நக்ஸல்களுக்கு இவன் அனுப்பி வந்துள்ளான்.ரகுவும் அவனது மனைவியும் ஆந்திராவுக்கு தப்பியோடிவிட்டது தெரியவந்துள்ளது.
டிப்ளமோ என்ஜினியரான ரகுவுக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியமொழிகள் நன்றாக பேசத் தெரியும்.
தப்பியோடிய ரகுவும் சுதாராணியும் ஆந்திரா மாநிலம் நல்லமலை வனப்பகுதியில்நக்சல்களுடன் ஊடுருவி விட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களைப் பிடிக்க ஆந்திர, தமிழக போலீசார் தனிப் படைகளை அமைத்துள்ளன.இருவரையும் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதாராணிக்கு நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.














Click it and Unblock the Notifications