கருணாநிதி தலைமையில் திருக்கோவில் வளர்ச்சிக் குழு!
சென்னை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் திருக்கோவில் வளர்ச்சிக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழுவின் தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துணைத் தலைவராக இருப்பார். இந்து அறநிலைய துறை ஆணையர் உறுப்பினர்-செயலராகசெயல்படுவார்.
குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள். இந்த அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை செயலாளர், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் மட தலைவர்முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்,
திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச பண்டார சன்னிதி, பேரூர் சாந்தலிங்கம் ராமசாமி அடிகள், செளந்தராகைலாசம், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னம்மாள், தொழிலதிபர் கருமுத்து கண்ணன்,பண்ணாரியம்ன் சுகர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் உறுப்பினர்கள்.
தருமபுரம் ஆதீனம் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார்.இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் சிறந்த முறையில் நிர்வகிக்க அரசுக்கு இந்தக் குழு உரியஆலோசனைகளை வழங்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications