மாவோயிஸ்ட் தலைவர் விடுதலை: மீண்டும் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேபாள நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கஜ்ரோல் 3 ஆண்டுகளுக்குப்பின்னர் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவரைமேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர்.

நேபாள நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்ற அமைப்புநேபாளத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவிலும் மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இந்தஅமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் பொலிட்பீரோ குழு உறுப்பினரான சந்திர பிரகாஷ் கஜ்ரோல், கடந்த

2003ம் ஆண்டுஆகஸ்ட் 20ம் தேதி சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் விமானம் மூலம் செல்லவிருந்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய சிறையில்அடைத்தனர். அதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கஜ்ரோல். போலிபாஸ்போர்ட் வழக்கில்அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் 1 வருட சிறைதண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு தண்டனைகளும் இன்று முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை கஜ்ரோல் சிறையிலிருந்துவிடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெளியே வந்ததும், தயாராக இருந்த மேற்கு வங்க போலீஸார் கஜ்ரோலைகைதுசெய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கஜ்ரோல் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக கஜ்ரோலை அம்மாநிலபோலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கஜ்ரோல் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கஜ்ரோல் மீண்டும் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதராவளர்கள் கோர்ட் வளாகத்தில்ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோர்ட்டின் அனுமதியை பெற்ற பின்னர் கஜ்ரோலை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்ல போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+