சிக்குன் குனியா: தத்தளிக்கும் வட சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வட சென்னையில் தொடர்ந்து சிக்குன் குனியாவால் மக்கள் கடும்அவதிக்குள்ளாகியுள்ளனர். மாதவரத்தில் இன்று தொழிலாளி ஒருவர் சிக்குன்குனியாவுக்கு பலியாகியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாகியுள்ளது. அனைத்துமாவட்டங்களிலும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்.

சென்னையில் சிக்குன் குனியா அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளது. தென்சென்னை, வட சென்னை என அனைத்துப் பகுதிகளிலும் இந்த காய்ச்சல் மக்களைவாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக வட சென்னையில்தான் சிக்குன்குனியாவின் பாதிப்பு அதிகம் உள்ளது.மாதவரம், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர் என பல பகுதிகளிலும்சிக்குன் குனியாவுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்கள்,தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல்உள்ளது.

இந்த நிலையில் சிக்குன் குனியாவுக்கு இன்று தொழிலாளி உயிரிழந்துள்ளார்.பாரதியார் 2வது தெருவைச் சேர்ந்த கொத்தனார் பச்சையப்பன் சிக்குன் குனியாவால்பாதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலம்மோசமாகி சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மாதவரம் ஆரம்ப சுகாதாரமையத்தில் இன்று மட்டும் 200க்கும் மேற்பட்டோர் சிக்குன் குனியாவுக்காக சிகிச்சைபெற்றுள்ளனர். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+