For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தஹார் விமானக் கடத்தல்: அல் கொய்தாதான் காரணம்!

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் நகரான காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டசம்பவத்தின் பின்னணியில் அல்கொய்தா அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு 178 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளகாந்தஹாருக்கு கடத்திச் செல்லப்பட்டது. அப்போது அங்கு தாலிபான்களின் ஆட்சி நடந்து வந்தது. தாலிபான்தீவிரவாதிகள்தான் இந்தக் கடத்தலுக்குக் காரணம் என அப்போது கூறப்பட்டது. ஆனால் அல்கொய்தாதீவிரவாதிகள்தான் இந்தியன் ஏர்லைன்ஸை கடத்தினர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஓசாமா பின்லேடனின் முன்னாள் மெய்க்காவலரான அபு ஜிண்டால்என்பவர் இந்தத் தகவலை அல்ஜஸீரா டிவியில் தெரிவித்துள்ளார்.

விமானங்களைக் கடத்தி நியூயார்க் இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டனில் மோதிய செயலுக்குமுன்னோட்டமாக இந்திய விமானத்தை கடத்தியுள்ளனர் அல் கொய்தா அமைப்பினர். அவர்கள் நடத்திய முதல்பெரிய விமானக் கடத்தல் இதுதான்.

இந்தக் கடத்தலின் போது தீவிரவாதிகள் கோரிய மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கார், அகமது உமர் சயீத்ஷேக் ஆகிய முக்கிய தீவிரவாதிகளை இந்திய அரசு விடுவித்தது. அதன் பிறகே விமான பயணிகளைவிடுவித்தனர் அல்கொய்தா தீவிரவாதிகள். இந்த சம்பவத்தில் ஒரு பயணி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிப்ான் அரசு இந்திய அரசுடன் நட்புறவில் இல்லாததால், கடத்தப்பட்டவிமானத்தை காந்தஹாருக்கு கொண்டு வருமாறு பின்லேடன் உத்தரவிட்டுள்ளார். இந்த விமானத்தை மீட்கஇந்திய அரசு போர் விமானங்களை அனுப்பினால் அவற்றை தகர்க்க ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்புஏவுகணைகளையும் அல்கொய்தாவினர் தயார் நிலையில் வைத்திருந்தனராம்.

3 முக்கிய தீவிரவாதிகளை இந்திய அரசு விடுதலை செய்ததும் அவர்கள் பின்லேடனை சந்தித்துள்ளனர்.அப்போது மசூத் அசாரை பின்லேடன் பாசத்துடன் வரவேற்றாராம். 3 பேரின் விடுதலையைக் கொண்டாட பெரியஅளவிலான விருந்துக்கும் லேடன் ஏற்பாடு செய்தாராம்.

இதேபோல, 1998ம் ஆண்டு யுஎஸ்எஸ் கோல் என்ற அமெரிக்க போர்க் கப்பலை தகர்க்க லேடன் திட்டமிட்டார்.ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து அக்கப்பல் ஏமன் நாட்டில் இருந்தபோது அதை தாக்கினர். ஆனால்அதில் ஓரளவு சேதம் மட்டுமே ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அமெரிக்காவுக்கும், ஏமனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. அல்கொய்தாஅமைப்பினரைத் தட்டிக் கேட்கவும் முடியாமல், அமெரிக்காவை சமாளிக்கவும் முடியாமல் ஏமன்தர்மசங்கடத்தில் ஆழ்ந்ததாம்.

தன்னால் முஸ்லீம் நாடு ஒன்றுக்கு பிரச்சினை வரக் கூடாது என்பதால் இந்த சம்பவத்திற்காக ஏமனிடம்தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தாராம் லேடன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X