கார்த்திகேசு என்னை கற்பழித்தார்: ஜமுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கார்த்திகேசு தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக ஜமுனா குற்றம் சாட்டியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த காதல் மன்னன் கார்த்திகேசு ஏற்கனவே கரீஷ்மா என்ற பெண்ணை திருமணம்செய்துள்ளார். அவர் சமீபத்தில் சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகளான 13 வயதுஜமுனாவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகேசு என்னை கடத்தவில்லை நான் தான் அவருடன் சென்றேன் என்று முதலில் கூறிய ஜமுனா தற்போதுபெற்றோருடன் சேர்ந்து விட்டார். கார்த்திகேசு கட்டிய தாலியையும் கழற்றி வீசி விட்டார். மேலும் கார்த்திகேசுஒரு மோசடி பேர்வழி. என்னை கடத்திதான் திருமணம் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில்,

Jamuna

கார்த்திகேசு என்னை திட்டமிட்டு கடத்தினார். அவர் என்னை கடத்தி சென்று நாளில் இருந்து மருத்துவமனைக்குவந்து சிகிச்சை பெற்ற 10 நாள் வரை என்னை மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். நான் எங்கு இருக்கிறேன்என்றே தெரியாமல் இருந்தேன். என்னை பலமுறை கற்பழித்தார். பிறகு அவர் கட்டாய திருமணத்திற்கு சம்மதிக்கவைக்க பெல்டால் அடித்தார்.

செலவுக்கு பணம் இல்லாததால் நான் அணிந்திருந்த தங்க செயின், கம்மல் மோதிரம், கொலுசு ஆகியவற்றைவிற்று உல்லாசமாக செலவு செய்தார். தினசரி செக்ஸ் சித்ரவதை, அடி, உதையை தாங்க முடியாமல் பல நாள்கதறினேன்,

என்னை திருமணம் செய்து கொண்டு மலேசியாவுக்கு கூட்டி செல்லப் போவதாகக் கூறினார். நான் திருமணத்திற்குசம்மதிக்கவில்லை. மலேசியாவிற்கும் வர மாட்டேன் என்று மறுத்தேன்.

Karthikesu

ஆனால் எனக்கு மயக்க மருந்து கொடுத்து கட்டாய தாலி கட்டினார். செக்ஸ் சித்திரவதை செய்த அவரிடம்இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே செல்லவேவிடவில்லை.

மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்ந்த நாள் அன்று கார்த்திகேசு யார் யாருடனோ செல்போனில் அடிக்கடிபேசிக் கொண்டிருந்தார். பதட்டமாகவே இருந்தார். மாலையில் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை நான்குடித்ததும் மயங்கி விழுந்தேன். கண் விழித்து பார்த்த போது மருத்துவமனையில் படுத்து கிடந்தேன். என்அருகிலேயே கார்த்திகேசுவும் படுத்து இருந்தார்.

அப்போது தான் எனக்கு விஷம் கொடுத்ததும், அவரும் விஷம் குடித்ததும் தெரியவந்தது.

நான் முழு சம்மதத்துடன் கார்த்திகேசுவுடன் சென்றதாக பொய் சொல்ல சொன்னார். அதனால் பயந்து போய்நான் நீதிமன்றத்தில் பொய் சொன்னேன். வீட்டுக்கு வந்தவுடன் தான் பயம் போனது.

கார்த்திகேசு செய்த செக்ஸ் சித்ரவதை, அடி, உதையால் இரவில் தூங்க கூட முடியவில்லை. அவர் கட்டிய கட்டாயதாலியை கழட்டி வீசி விட்டேன். என்னை சீரழித்த கார்த்திகேசுவுக்கு தண்டனை பெற்று தரும் வரைஓயமாட்டேன் என்றார் ஜமுனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+