2 கோடி பரிசு- ஜெவுக்கு குற்றப் பத்திரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடிக்கான டி.டிக்களை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்ட வழக்கில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளன்று பரிசாக ரூ. 2 கோடிக்கு89 டி.டிக்கள் அவருக்கு வந்தன. இவற்றை அரசின் கணக்கில் சேர்க்காமல் தனது கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் அது கோரியது.இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த இந்த வழக்கில்கடந்த ஜூலை மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இனி வரும் வாய்தாக்களில் அவர்நேரில் ஆஜராகத் தேவையில்லை என நீதிபதி விலக்கு அளித்தார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர், ஜெயலலிதா சார்பில்குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஏற்கனவேஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications