இலங்கையில் காலூன்றும் சீனா, பாக்-நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

பழனி:

இலங்கையில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் காலூன்றி வருகின்றன. எதிர்காலத்தில் இந்த நாடுகளால்தமிழகத்திற்குத்தான் பெரும் ஆபத்து உள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்எச்சரித்துள்ளார்.

பழனியில் பற்றி எரியும் தமீழழமும், பதறித் துடிக்கும் தமிழகமும் என்ற தலைப்பில் பழ. நெடுமாறன் பேசினார்.அப்போது, லெபனான்-இஸ்ரேல் போருக்கு குரல் கொடுக்கும் இந்தியா, இலங்கையில் தமிழன் கொன்றுகுவிக்கப்படுவது குறித்து எந்தக் குரலும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.

இலங்கைத் தமிழனுக்காக இந்திய அரசு எந்த ஆதரவையும் தெரிவிக்காமல் உள்ளது. உடனடியாக மத்தியஅரசிடம் தமிழனின் நிலை குறித்து தெரியப்படுத்தி அவனைக் காப்பாற்ற கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் அவரது பெயர் வரலாற்றில் பதியப்படும்.

முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் வேறு நாடுகள் ராணுவத் தளம் அமைத்தால் அதுஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும். அதற்கு இந்தியா சரியான பதிலடியைத் தரும் என்றார்.

இன்று இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.இலங்கையில் காலூன்று முயற்சிக்கின்றன. அப்படி ஒன்று நேர்ந்தால், போர்க்காலத்தில், இந்தியாவில் தமிழகம்தான் முதல் அடியை வாங்க நேரிடும். இதை அனைத்துத் தமிழர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இலங்கை விஷயத்தில் இந்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றார் நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+