அரசியலுக்கு வரும் கிழட்டு நடிகர்கள்-ராமதாஸ்
தஞ்சாவூர்:
சினிமாவில் ஓய்வு பெறும் வயதை எட்டியதும் அரசியலுக்குப் புகுந்து விடுகிறார்கள் என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், சிலநடிகர்கள், சினிமாவில் ஓய்வு வயதை எட்டியதும், அரசியலுக்குள் வந்து விடுகிறார்கள்.சினிமாவில் நடக்கும் அட்டூழியங்களை நான் சுட்டிக் காட்டிப் பேசினால் என்னை விமர்சிக்கிறார்கள். மக்களைநான் கெடுப்பதாக என் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் அவர்களைப் பார்த்து தான் நாடே கெட்டுப்போய்க் கிடக்கிறது.
இப்போது பாமகவினர் மக்களுக்கு உருப்படியான செய்தித் தாள் ஒன்றையும், தொலைக்காட்சி ஒன்றையும் நடத்திவருகிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தக் கெடுதலும் வராது. அவை இரண்டுமே மக்களுக்கானவை.
ஜெயலலிதாவுக்கு தலைவராக இருக்கும் தகுதியோ, அதற்கான திறமையோ கிஞ்சித்தும் கிடையாது. நர்வாகத்திறமையும் அறவே கிடையாது. தலைமைத்துவப் பண்பை, திறமையை வளர்த்துக் கொள்ள நாட்டிலேயேபாமகவில் மட்டுமே உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. வேறு எந்தக் கட்சியிலும் இப்படிப்பட்ட அரசியல் பயிற்சிகிடையாது.
மக்களுக்கு இப்போதைய அரசியல் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் நிறைய விழிப்புணர்வு உள்ளது.எனவே பாமகவினர் மக்கள் பிரச்சினைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். எங்கெல்லாம் மக்கள்பிரச்சினையில் இருக்கிறார்களோ அங்கு ஓடிச் சென்று உதவ வேண்டும்.
பாமக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வருகிற 24ம் தேதி நடைபெறும். முதல் மாநாடு இது என்பதால் அலைகடலென இளைஞர்கள் திரண்டு வர வேண்டும். இதே போல 1 லட்சம் மகளிரை திரட்டி மாபெரும் மாநாடுபூம்புகாரில் நடைபெறும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications