குடிகார மகனை வெட்டி வீழ்த்திய தாய்!
திருச்சி:
குடித்து விட்டு ரகளை செய்த மகன், தன்னை வெட்ட முயன்றபோது ஆத்திரமடைந்ததாயார் மகனையே வெட்டி சாய்த்தார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சரசு (வயது 52). இவரது கணவர் பெரியண்ணன். இவர்களதுமகன் ரவிச்சந்திரன் (21). இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்வதேரவிச்சந்திரனுக்கு வேலை. குடிபோதையில் தாய், தந்தையை திட்டுவதும்,அடிப்பதுமாக இருந்துள்ளார்.
இருந்தாலும் பொறுமையுடன் இருந்து வந்துள்ளனர் பெரியண்ணன், சரசு தம்பதியினர்.
இந் நிலையில் வழக்கம்போல் தாய், தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்ரவிச்சந்திரன்.
சண்டை முற்றி கோபத்தில் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாயாரைவெட்டப் பாய்ந்துள்ளார். அதுவரை அமைதியாக இருந்து வந்த சரசு, அரிவாளுடன்மகன் பாய்ந்ததைப் பார்த்து ஆவேசமானார்.
ஓங்கிய அரிவாள் மனையை பிடுங்கிய அவர் ரவிச்சந்திரனை சரமாரியாக வெட்டித்தள்ளினார். இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர்சரசு போலீஸில் சரணடைந்தார்.
ஸ்ரீரங்கம் பகுதியை உலுக்கிவிட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications