For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராக்கெட் லாஞ்சர்: 7 பேருக்கு போலீஸ் காவல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

ராக்கெட் லாஞ்சர் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள 7 பேரை 5 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து அம்பத்தூர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் ஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்காக லாரி மூலம்கடத்தப்பட்டபோது அவை ஆந்திர போலீஸாரிடம் சிக்கின.

சீனிவாசரெட்டி என்பவர்தான் இந்த ராக்கெட் லாஞ்சர்களை லாரி மூலம் ஆந்திராவுக்கு அனுப்பியது தெரியவந்தது. பின்னர் இந்த சீனிவாச ரெட்டியின் உண்மையான பெயர் ரகு என்பதும் அவரும், அவரது மனைவிசுதாராணியும் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்துக் கொடுத்த 7 நிறுவனங்களும் சிக்கின. இதுதொடர்பாக 7 பேரைபோலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவாஜி, அருணாச்சலம், ரமேஷ், குமார், முத்துச்சாமி, வீரபத்திரராவ், அண்ணாமலை ஆகியோரை நேற்று அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட் சத்யாவிடம், 7 பேரிடமும் மேல் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களை போலீஸ்காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றமாஜிஸ்திரேட் சத்யா, 5 நாள் போலீஸ் காவலில் விடுவித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து 7 பேரையும் பலத்த காவலுடன் போலீஸார் அழைத்துச் சென்றனர். சென்னை புறநகரில் ரகசியஇடத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், இவர்களின்தொழிற்சாலைகளுக்கும் அழைத்துச் சென்று ராக்கெட் லாஞ்சர்களை எப்படித் தயாரித்தனர் என்பதை நேரடியாகபார்க்கவும் உள்ளனர்.

நக்சலைட்டுகளுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது, யார் மூலம் தொடர்பு கொண்டார்கள், ஆயுதத்தயாரிப்பு தொடர்பாக எப்படி ஒப்பந்தம் செய்கிறார்கள், எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பது உள்ளிட்டஅனைத்து விவரங்களையும் இவர்களிடம் பெறவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X