செய்யாறு-300 கோடியில் காலணி தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செய்யாறில் ரூ. 300 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதிமுன்னிலையில் கையெழுத்தானது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும் தைவான் குரோத் லிங்க் நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

குரோத் லிங்க் நிறுவனம், பெங்க் டே எண்டர்பிரேசஸ் என்னும் தைவான் நாட்டு ஷூ தயாரிப்பு நிறுவத்தின்துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்கள், ஸ்கேட்டிங் ஷூக்கள், சாதாரணஷூக்கள் போன்றவற்றை தயாரிப்பதோடு புகழ்பெற்ற உலக பிராண்ட் ஷூ வகைகளையும் தயாரிக்கிறது.

பெங்க் டே நிறுவனம் சீனாவிலும், வியட்நாமிலும் நான்கு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு இந்த நிறுவனம் 770 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளது. மேலும்பல்வேறு இடங்களிலும் மொத்தம் 60,214 பணியாளர்களைக் கொண்டு இந் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந் நிலையில் குரோத் லிங்க நிறுவனம் தமிழ்நாட்டில் செய்யாறில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் 275 ஏக்கர்பரப்பளவில் காலணிகள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கவும், அம் மண்டலத்தில் காலணிகள்தயாரிப்புத் தொழிற்சாலையை அமைக்கவும் முன் வந்துள்ளது.

இத் திட்டத்தை குரோத் லிங்க் மற்றும் அதன் குரூப் நிறுவனங்கள் இணைந்து ரூ. 300 கோடி நேரடி முதலீட்டில்நிறுவ உள்ளன.

இதன் மூலம் முதற்கட்டமாக 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இத்திட்டத்தின் அனைத்துவிரிவாக்கப் பணிகளும் நிறைவுற்ற நிலையில் சுமார் 15,000 பேர் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்பணியில் அமர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+