ஆத்திரம்-மனைவி உதட்டை கடித்து துப்பிய கணவர்
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தில் அவரது உதட்டைக்கடித்து துப்பிய சம்பவம் வாணியம்பாடியில் நடந்தது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வன்னியநாதபுரத்தைச் சேர்ந்தவர்வெங்கடேசன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கல்யாணமாகி 10 ஆண்டுகள்ஆகின்றன.இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் வெங்கடேசன்.இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று முன்தினம்இரவும் சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது மனைவியின் உதட்டை ஆவேசமாககடித்து துப்பினார்.
வலியால் துடித்த ஜானகி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார்வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.
அன்பில் மனைவியின் உதட்டைக் கடிப்பார்கள், ஆத்திரத்தில் கடித்துத் துப்பவும்செய்வார்களோ?












Click it and Unblock the Notifications