ஜிப்மர்-ஸ்டிரைக் நடத்த இடைக்காலத் தடை
சென்னை:
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் ஊழியர்கள் போராட்டம் நடத்த2 வார கால இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஜிப்மர் ஊழியர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறக் கோரி கடந்த 8ம் தேதி முதல்அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் ஜிப்மர் வளாகத்திற்குள் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்என்று கோரி தேவநேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் சதாசிவம், தமிழ்வாணன் ஆகியோர்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 2 வார காலத்திற்கு ஜிப்மர் வளாகத்திற்குள்போராட்டம் நடத்த தடை விதித்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள்,நோயாளிகளை யாரும் தடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக வருகிற 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஜிப்மர்ஊழியர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்குவிசாரணையையும் அன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications