காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் தர அரசு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசின்வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அரசினர் தோட்டம், எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் உள்ள 2ஹோட்டல்களை மிகக் குறைந்த வாடகைக்குத் தந்து அரசுக்கு பல லட்சம் ரூபாய்அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார் காளிமுத்து.

இது தொடர்பாக காளிமுத்து மீது மட்டும் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி காளிமுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி நாகப்பன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது.

அப்போது காளிமுத்து சார்பில் ஆஜரான அதிமுக வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில்,

காளிமுத்து உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். எனவேவிசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு தருவார். எனவே அவருக்கு முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் கடும் எதிர்ப்புதெரிவித்தார். அவர் கூறுகையில், காளிமுத்துவுக்கு முன் ஜாமீன் அளித்தால் அதுவிசாரணையை பாதிக்கும். எனவே முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகப்பன், விசாரணையைவியாழக்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+