கிருஷ்ணருக்கு ஜீன்ஸ், டீ-சர்ட்: பூசாரிக்கு கல்தா
பிருந்தாவன்:
கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டீ சர்ட் போட்டும், புல்லாங்குழலுக்குப் பதில்செல்போனை வைத்தும் அழகு பார்த்த பூசாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேக மாநிலம் பிருந்தாவனில் பேங்கி பிகாரி என்ற புகழ் பெற்ற கிருஷ்ணர்ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த சில பக்தர்கள்,கிருஷ்ணரை மாடர்ன் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டனர்.
உங்க ஆசையை நிறைவேத்த நான் என்ன பண்ணனும் என்று பூசாரி ஜூகல்கோஸ்வாமியும் குஷியாக கேட்டுள்ளார்.
![]() |
| பூசாரி ஜீன்ஸ், டி-சர்ட் அணிவித்தது இந்த சுவாமி சிலைக்குத் தான் |
உடனே அந்த குறும்புக்கார பக்தர்கள், ஜீன்ஸ், டீ சர்ட் போட வேண்டும், குழலுக்குப்பதில் கையில் செல்போனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பண்ணிடலாமே என்று கூறிய பூசாரி கோஸ்வாமி, பக்தர்களின் ஆசையைநிறைவேற்றிவிட்டார்.
கிருஷ்ணரை ஜீன்ஸ், டி-சர்ட்டில் பார்த்த பக்தர்கள் கொதித்துப் போயினர். சுவாமியைஅவமதித்த பூசாரி கோஸ்வாமிக்கு எதிராக பஜ்ரங் தள், வி.எச்.பி. உள்ளிட்டஅமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
பூசாரியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத பூசாரி, சத்தியமாக உள்நோக்கத்துடன் நான் இதைச்செய்யவில்லை, இதை அரசியலாக்கிவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.
ஆனால் எதிர்ப்பு அதிகரித்ததால், கோவில் நிர்வாகம் பூசாரியை வேலையை விட்டுநீக்கி விட்டது.













Click it and Unblock the Notifications