ராமதாஸின் பெரியார் மான மீட்புப் படை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப மான மீட்புப் படை அமைக்கப்படும் என பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் பாமக சார்பில் பெரியாரின் 128வது பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், ராமதாஸ், பாமகதலைவர் ஜி.கே.மணி, கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், ஆளுகிற மொழி அத்தோடு ஆங்கிலம்உள்ளிட்ட 18 மொழிகளும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி ஆகிறபோது தமிழும் ஆட்சிமொழியாகும்.

பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாகவேஉள்ளது. பெரியார் மது ஒழிப்பு போராட்டத்தில் தன்னுடைய தென்னை மரங்களையேவெட்டிச் சாய்த்தார்.

ஆனால் இன்றோ, நன்றாகக் குடியுங்கள் என்று தெருவுக்குத் தெரு கடை வைத்துக்கொடுத்துள்ளோம்.

பெரியாரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாவற்றையும் பள்ளி, கல்லூரிகளில்புத்தகமாக வைக்க வேண்டும். 300, 400 இளைஞர்களை கருஞ்சட்டை படை போலநான் உருவாக்கியிருக்கிறேன்.

இதைத் தவிர மான மீட்பு படை என்ற இயக்கத்தை விரைவில் தொடங்கி பெரியார்கொள்கைகளை பறை சாற்றும் வேலையில் இறங்குவேன் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+