தமிழக பாஜக தலைவரானார் இல.கணேசன்
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவர் இல.கணேசன்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிந்ததைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. நேற்று மாலையுடன்போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்தது.மனு தாக்கல் கெடு முடிவுக்குப் பின்னர் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்இல.கணேசனின் பெயர் மட்டுமே போட்டியில் இருந்தது. இதைத் தொடர்ந்து இன்றுகாலை கூடிய பொதுக் குழுக் கூட்டத்தில் இல.கணேசன் போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி மேலிடப் பார்வையாளர் ராம் நாயக் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிய தலைவராக இல.கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்குப் பதவியிலிருந்து விலகும் ராதாகிருஷ்ணன், அகில இந்திய துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில், மத்தியில் உள்ளகாங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்து வழிகளிலும் தோல்வி அடைந்து விட்டது.பிரிவினைவாதம் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக நாடு எப்போதும் ஒருபதட்டத்திலேயே இருந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications