இஸ்லாமிய நாட்டு தூதர்களை சந்திக்கும் போப்
ரோம்:
இஸ்லாம் மதத்துக்கு எதிராக போப் தெரிவித்த கருத்துக்களால் உலகம் முழுவதும்போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் வாடிகனில் உள்ள இஸ்லாமிய நாடுகளைச்சேர்ந்த தூதர்களை போப் சந்திக்கிறார்.
வரும் திங்கள்கிழமை இச் சந்திப்புக்கு போப் அழைப்பு விடுத்துள்ளார்.கத்தோலிக்கர்களின் மத குருவான போப் 16ம் பெனடிக்ட் சமீபத்தில் தனது சொந்தநாடான ஜெர்மனியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,வன்முறையின் மூலமாகவே இஸ்லாம் வளர்ந்தது என்ற மன்னர் ஒருவரின் கருத்தைமேற்கோள் காட்டிப் பேசினார்.
இதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக போப் விளக்கம்தந்தார்.
மேலும் தனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம்தெரிவிப்பதாகவும் கூறினார். இதனால் ஓரளவுக்கு எதிர்ப்பு தணிந்துள்ளது.
இருப்பினும் இஸ்லாமிய நாடுகளிலும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பலபகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில், வாடிகன் நகருடன் தூதரக உறவு வைத்துள்ள இஸ்லாமிய நாடுகளின்தூதர்களை போப் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ரோம் நகருக்கு அருகே காஸ்டல் கண்டோல்பா என்ற இடத்தில் உள்ள தனதுகோடைகால ஓய்வு மாளிகையில் வரும் திங்கள்கிழமை இந்தத் தூதர்களைசந்திக்கிறார்.
அப்போது சர்ச்சைக்குள்ளான தனது கருத்து குறித்து போப் விளக்கம் தருவார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications