மின் கோளாறு- நடுவழியில் நின்ற ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்சார கோளாறு காரணாமாக ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் ரயில்நிலையங்களில் ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள்சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னையிலிருந்து ஆவடி வழியாக அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சாரரயில் அண்ணனூர் நிலையம் அருகே சென்ற போது, மின் கம்பியில் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.இதனால் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ்ரயில்கள் ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம்ஆகிய ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன.
மின் கோளாறை சீர் செய்யும் பணி ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. இதனால்பயணிகள் நடுவழியில் சிக்கி தவித்தனர்.
கடந்த 15 ம் தேதி இரவும் இதே பகுதியில் மின் கோளாறு காரணமாக ரயில்கள் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications