மதுரை: தேமுதிக வேட்பாளர் பன்னீர்செல்வம்
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிக சார்பில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
![]() |
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் கட்சியின் பொருளாளர் சுந்தர்ராஜன் போட்டியிட்டு சுமார்12,000 வாக்குகளை அள்ளினார். இதனால் தான் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் திமுகவின் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வெல்ல நேர்ந்தது.
இத் தொகுதியில் தான் விஜய்காந்தின் பூர்வீக வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்காந்தின்மனைவி பிரேமலதாவே களமிறங்கக் கூடும் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் வழக்கறிஞர் பன்னீர்செல்வத்தை நேற்று கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் தேர்வு செய்தார்.இதையடுத்து உடனடியாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக வேட்பாளரும், கட்சியின் பொருளாளர் சுந்தர்ராஜன், முன்னாள் எம்.பி. ஆஸ்டின், மதுரை மாவட்டதேமுதிக தலைவர் ராஜா, நகரச் செயலாளர் ராமர் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஏராளமான கார்களில்மத்திய தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆனால், அவர்களது வாகனங்களை தேர்தல் அலுவலக நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பையும் மீறி தேர்தல் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.தேர்தல் அதிகாரி மூக்கையாவிடம் பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவுடன் வேட்பாளரின் ஓட்டு இடம்பெற்றுள்ள திருப்புத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் சான்றைபன்னீர் தரவில்லை. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனைக்குள் அந்த சான்றிதழை கொடுக்க வேண்டும் எனதேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
பன்னீரை வேட்பாளராக தேர்வு செய்ய விஜய்காந்த் மதுரையில் தான் தங்கியிருந்தார். வேட்புமனுதாக்கலின்போது அவரும் வருவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வரவில்லை.
இன்று கடைசி நாள்:
இதற்கிடையே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்றே (சனிக்கிழமை) கடைசிநாளாகும்.
இத் தொகுதியில் வரும் அக்டோபர் 11ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.













Click it and Unblock the Notifications