உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
விழப்புரம்:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக விழப்புரம் மாவட்ட அரவாணகள் சங்கத் தலைவரி ராதா அம்மாள் மற்றும் அரவாணிகள்செல்வி, ரம்யா, வனிதா, தனம், ஷப்னா ஆகியோர் கூறுகையில்,
அரவாணிகளான எங்களுக்கும் சமூக அக்கறை இருக்கிறது. இந்த சமூகத்துக்கு முன்னுதாரணமாக ஒரு அரவாணிவரவேண்டும் என்று விரும்புகிறோம். அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்ததால் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லாமல் போனது.
![]() |
உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சார்பில் குறிப்பிட்ட சில இடங்களில் கவுன்சிலர்பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். எங்களை வைத்து கூவாகம் திருவிழாவில்ஆதாயமடைந்த தன்னார்வ நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் ஓன்றிரண்டு கைகொடுத்தால் கூடநாங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும்.
எங்களை புறக்கணிக்கும் இந்த சமூகத்துக்கு எங்களாலும் நன்மை செய்ய முடியும் என்பதை காட்ட இந்தத்தேர்தலை பயன்படுத்திக் கொள்வோம் என்றனர்.













Click it and Unblock the Notifications