For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுரோட்டில் பஸ்-ஆட்டோ டிரைவர்கள் டிஸ்யூம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் அரசு பஸ் டிரைவரும், ஷேர் ஆட்டோ டிரைவரும் நடுரோட்டில்ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உருண்டனர்.

சென்னை திருவிக நகரில் இருந்து 8பி பேருந்து பயணிகளுடன் உயர் நீதிமன்றம்நோக்கிச் சென்றது. பேசின்பாலம் வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஷேர்ஆட்டோ டிரைவர் அதை இஷ்டம்போல் ஓட்டிச் சென்றார்.

நெடு நேரம் ஒலி எழுப்பியும் பஸ்சுக்கு வழிவிடவில்லை. மேலும் அங்காங்கேநடுரோட்டில் ஆடடோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினார்.

ஒரு இடத்தில் ஆட்டோ நிற்க, பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவர்கோயில்ராஜ் ஆட்டோ டிரைவர் சையத் அலியைத் தட்டிக் கேட்டார்.

அப்போது பஸ் டிரைவரை சையது அலி ஆபாசமாக திட்டியதாகத் தெரிகிறது.இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அது சீரியசாகிநடுரோட்டிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

பயணிகள் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X