குஜராத்தை தாக்கும் புயல்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சமீபத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. இந்த சோகத்தில் இருந்து குஜாரத் மக்கள் இன்னும்மீளவில்லை.இந் நிலையில் குஜராத்தை மீண்டும் புயல் தாக்கவுள்ளது. இதையடுத்து மாநில கடற்கரை மாவட்டங்களுக்கு புயல்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர்பந்தருக்கு தென் மேற்கே 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைகடக்கும் என்று தெரிகிறது.
இதனால் கடற்கரை மாவட்டங்களான கட்ச், ஜாம்நகர், போர்பந்தர் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கசெல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ளது. கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் இடத்தைவிட்டு காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications