கார்த்திக் கட்சி, புதிய தமிழகம் தனித்து போட்டி
மதுரை:
உள்ளாட்சி தேர்தலில் கார்த்திக்கின் பார்வார்டு பிளாக் கட்சியும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்கட்சியும் தனித்து போட்டியிகின்றன.
இதுகுறித்து பார்வர்ட் பிளாக்மாநில துணைத்தலைவர் முத்தையா பசும்பொன் கூறுகையில்,எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது ஆகியவைகுறித்தும் கார்த்திக் கருத்துக்களை கேட்டறிந்தார்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும்,இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு தருவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில், மதுரை உள்ளபட தென் மாவட்டங்கள் முழுவதும் தனித்து போட்டியிடவும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதன் மூலம் முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் பகுதியில் மட்டும் போட்டியிடவும் பிற இடங்களில்போட்டியிடுவதில்லை என்றும் கார்த்திக் முடிவுக்கு வந்துள்ளார்.
புதிய தமிழகம்:
அதே போல உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்தே போட்டியிடும் என அக் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் கொடுக்காமல் செப்டம்பர் 19ம் தேதி இரவில் தேர்தல் தேதியைஅறிவித்து, மறுநாளே வேட்பு மனு தாக்கல் துவங்குவதாக அறிவித்தது சரியல்ல.
முன்பிருந்த நடைமுறையின்படி ஊராட்சி ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயரை மக்களேநேரடியாக தேர்வு செய்ய வேண்டும். புதிய முறையின் கீழ் கவுன்சிலர்கள் அவர்களை தேர்வு செய்வதாகஇருப்பது ஊழலுக்கு தான் வழி வகுக்கும். உள்ளாட்சி தேர்தலின் அடிப்படை நோக்கத்தையே அது தகர்த்துவிடும்.
வழக்குகளில் சிக்கியவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால் தீண்டாமை ஒழிப்புவழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகதகவல்கள் வருகிறது. இது வருத்தமளிக்கிறது. என்றார்.
பாஜக-ஜனதா கூட்டணி:
அதே போல உள்ளாட்சித் தேர்தலில் ஜனதா கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து அனைத்துஇடங்களிலும் போட்டியிடும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் மூன்றாவது அணியை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இலவச நிலம், வீட்டுமனை பட்டா கொடுப்பதாக கூறி, திமுக அரசு மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவோம் என்றார்சுவாமி.












Click it and Unblock the Notifications