பெட்ரோல்-டிசல் விலை குறையும்: முரளி தியோரா
மும்பை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சரிந்து வருவதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறையும் எனமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
மும்பையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது ஒரு பேரல் கச்சாஎண்ணை 57 முதல் 58 டாலராக உள்ளது. சில வாரங்களில் இந்த விலையில் மேலும் சரிவு இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை 50 டாலராக குறைந்தால் நம் நாட்டுக்கு நல்லது. கச்சா எண்ணை விலை குறைவு இந்தியாவிலும்எதிரொலிக்கும். ஆகவே வரும் சில வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.
ஆனால் இந்த விலை குறை எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது. கடந்தஆண்டு பெட்ரோல், டீசல், மண் எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட மானியம்காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 72,500 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications